Translate

Tuesday, July 17, 2012

கண்வலி தைலம்

கீழ்கண்ட மூலிகைகளை எண்ணெயில் காய்ச்சி தைலம் செய்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை ஆகியவை குறையும்.


கரிசலாங்கண்ணி

கீழாநெல்லி

பொன்னாங்கண்ணி


அறிகுறிகள்:

கண் வலி.
கண் எரிச்சல்.
மங்கலான பார்வை.
தேவையான பொருள்கள்:

கரிசலாங்கண்ணி சாறு.
பொன்னாங்கண்ணி சாறு.
கீழாநெல்லி சாறு.
சோற்றுக்கற்றாழை.
எள் எண்ணெய்.
விளக்கெண்ணெய்.
நெய்.
வெள்ளை மிளகு.
சந்தனக்கட்டை.
வெட்டி வேர்.
பசும்பால்.
இளநீர்.
செய்முறை:

கரிசலாங்கண்ணியை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி ஆகியவற்றின் வேரை நீக்கி அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
சோற்றுக்கற்றாழை தோல் நீக்கி சோற்றை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
ஒரு மண் பானையில் எள் எண்ணெயை ஊற்றி சூடேறியதும் விளக்கெண்ணெய் ஊற்றி சூடேற்றி நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு அனைத்து சாறுகளையும் ஊற்றி மூடி வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எடுத்து ஆற வைக்க வேண்டும்.
பிறகு வெள்ளை மிளகை உடைத்து 200 மி.லி பசும்பாலில் 1 மணி நேரம் ஊற வைத்து அதே பாலை கொண்டு மை போல அரைத்து தைல பானையில் போட வேண்டும்.
சந்தனக்கட்டையை மாவாக இடித்து 200 மி.லி இளநீரில் 2 மணி நேரம் ஊற வைத்து மை போல அரைத்து தைல பானையில் போட வேண்டும்.
வெட்டி வேரை இடித்து தைல பானையில் போட வேண்டும்.
தைல பானையை மீண்டும் சிறு தீயில் காய்ச்சி தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

காலையில் இந்த தைலத்தை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வர வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை ஆகியவை குறையும்.
குறிப்பு:
இந்த தைலத்தை தேய்த்து வரும் நாட்களில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும். தயிர், இளநீர், குளிர்பானங்கள், பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும்.

No comments:

Post a Comment