தேவையான பொருட்கள் :
பச்சரிசி நொய் - 1 கப்
பச்சைப் பயிறு (முழுப் பயிறு) - 1 கப்
முருங்கைக்கீரை - தேவையான அளவு
சுக்கு - 1 துண்டு
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பச்சைப் பயிரை அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கவும்.
கழுவி சுத்தம் செய்யப்பட்ட அரிசியை எட்டுக் கப் தண்ணீரில் நன்கு வேகவையுங்கள்.
இதனுடன் ஊறவைத்த பச்சை பயிரையும் சேர்த்து வேகவையுங்கள்.
சுக்கை நன்கு அரைத்து / பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
அரிசி நன்கு வெந்தப்பின் முருங்கைகீரை + உப்பு + சுக்கை சேருங்கள்.
பச்சைப் பயிறு நன்கு வெடித்து மலரும் வரை வேகவிடுங்கள் + அரிசியும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து பின்பு இறக்குங்கள்.
குறிப்பு :-
பச்சரிசி பயன் படுத்தாதவர்கள் புழுங்கலரிசி பயன்படுத்துகள். வாரத்திற்கு ஒரு நாள் இதனை செய்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment