Translate

Tuesday, July 17, 2012

மஷ்ரூம் குழம்பு

காளான்

தேங்காய் துருவல்

தக்காளி


தேவையான பொருள்கள்:

காளான் = கால் கிலோ
தேங்காய் = 1 கப்
தக்காளி = 4
வெங்காயம் = 2
மிளகு = 20 கிராம்
ஏலக்காய் = 6
பூண்டு = 12 பல்
கிராம்பு = தேவையான அளவு
பட்டை = தேவையான அளவு
மிளகாய் பொடி= 4 தேக்கரண்டி
கடுகு = சிறிது
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:

காளானை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இரணடையும் நறுக்கி கொள்ளவும்.
மிளகு, ஏலக்காய், பூண்டு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் காளானை போட்டு வதக்கி பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்திருந்த மசாலாவை போட்டு வதக்கவும். மசாலா வதங்கியதும் தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறி தேங்காய் பாலை விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான மஷ்ரூம் குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், நூடுல்ஸ், பிரட் போன்றவற்றோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இந்த ஆரோக்கியமான மஷ்ரூம் குழம்பை அனைவரும் உணவில் சேர்த்து சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

No comments:

Post a Comment