Translate

Saturday, July 14, 2012

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

 ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் எரிந்து போய்விட்டேன்!" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்றார்கள். அவர், 'ரமளானில் என் மனைவியுடன் கூடிவிட்டேன்!" என்று பதிலளித்தார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அரக்' என்று கூறப்படும் ஓர் அளவை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டு வரப்பட்டது. 'எரிந்து போனவர் எங்கே?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நானே" என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து.) 'இதை தர்மம் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

No comments:

Post a Comment