Translate

Friday, July 20, 2012

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர்தெடுக்க அபூபக்ர் ளரலின தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது, என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீஙகள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும் என்று கேட்டார்கள். அதற்_க அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரை நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக தெழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழஙகி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழஙக மறுத்தால்கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளஙகிக்கொண்டேன் என்றார்கள். 

No comments:

Post a Comment