Translate

Thursday, July 19, 2012

குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும்.

காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.
குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.
குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது.
வாழைத்தண்டு, சிறுநீர்க் கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்கச் சிரமப்படுகிறவர்கள் வாழைத் தண்டுக் கறி சமைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.
சில இளம் பெண்கள், குட்டி யானை நடப்பது போல அசைந்து நடப்பார்கள். ஊளைச்சதை இப்படிப் பல பெண்களின் அழகைக் கெடுத்து விடுகிறது. குண்டாக இருப்பவர்கள் இலந்தைமா இலையைக் கொண்டு வந்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் தினசரி ஒரு டம்ளர் குடித்து வாருங்கள், ஊளைச்சதை குறையும். யானை, மான் ஆகும்!
மலர்களையும் பழங்களையும் பயன்படுத்திப் பல மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சில யுனானி மருத்துவர்கள், குல்கந்து என்று சொல்லப்படும் மருந்தைத் ரோஜா, பேரீச்சம் பழம் ஆகியவற்றிலிருந்து தயாரித்திருக்கிறார்கள். மலச்சிக்கலுக்குக் குல்கந்து ஒரு சிறந்த மருந்து. குடல் சம்பந்தமான வியாதிகளை இது குணப்படுத்துகிறது!
உணவுப் பொருட்களை வேகவைத்துச் சாப்பிடுகிறோம். சுட்டுச் சாப்பிடுகிறோம். பொரித்து சாப்பிடுகிறோம். இதில எது நல்லது? எது கெட்டது? வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது.
நம் உடம்பில் யூரிக் ஆஸிட் இருக்கிறது. இந்த ஆஸிட் கெட்டியாவதால்தான் மூத்திரப் பையில் சிறு கட்டிகள் உருவாகின்றன. இந்த ஆஸிட்டைக் கரைப்பதற்கு அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். குறைவாகத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்குக் கண்டிப்பாக மூத்திப்பையில் கல் உற்பத்தியாகும்!
முகத்திலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் பெருத்து, அதில் இருந்து எண்ணெய் சுரப்பதால் முகத்தில் பருக்கள் உண்டாகின்றன. முகத்தை அடிக்கடி வெந்நீரில் கழுவி, சல்பர் லோஷன் போட்டு வந்தால், பருக்களோ சருமநோய்களோ முகத்தில் வராது.
துளசிச் செடியை மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம். துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். ஜுரம் உங்கள் பக்கத்தில் வராது                        .

No comments:

Post a Comment