சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (லுஹ்ர்
அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள்.
உடனே துல்யதைன்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா?'
என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), 'துல்யதைன் கூறுவது உண்மையா?'
என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து
பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, 'அல்லாஹு அக்பர்'
என்று சொல்லித் தம் (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தாச் செய்துவிட்டு பிறகு தலையை
உயர்த்தினார்கள்
No comments:
Post a Comment