Translate

Saturday, August 11, 2012

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். 
(பிறகு அவர்களை நோக்கி) 'அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ!" என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment